Tuesday, July 21, 2009
ரஜினி அரசியல் பிரவேசத்தை எதிர் பார்க்கிறேன்- மகள் சவுந்தர்யா
ஏற்கனவே போஸ்டர்கள் அச்சிட்டும் கூட்டங்களில் தீர்மானம் போட்டும் ரஜினிக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களின் வற்புறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ரஜினியோ ஆண்டவன் என்ன நினைக்கிறானோ அதன்படி நடக்கும் என்று சொல்லி பிடி கொடுக்காமலேயே நழுவுகிறார்.
இரண்டு தேர்தல்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறி மாறி ஆதரவு தெரிவித்தார். பின்னர் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று ஒதுங்கிவிட்டார். என்றாவது ஒருநாள் ரஜினியின் அரசியல் பிரவேசம் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் ரஜினி மகள் சவுந்தர்யா தற்போது ரஜினி அரசியலில் ஈடுபட ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:-
என் தந்தை ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லோரும் ஆர்வப்படுகிறார்கள். அதுபோல் நானும் அவரது அரசியல் பிரசேவத்தை எதிர்பார்க்கிறேன்.
அவர் அரசியலில் ஈடுபட்டால் மற்றவர்களை திரும்பி பார்க்க வைப்பார். காரணம் அவருக்கு தெரிந்தது நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். அரசியலுக்கு வந்தால் தனது நடவடிக்கை மூலம் தனி முத்திரை பதிப்பார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவரது செயல்பாடுகள் எல்லோரையும் கவர்வதாகவே இருந்துள்ளன. அது அரசியலுக்கு வந்தாலும் இருக்கும். அவர் வருவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றார்
Monday, July 20, 2009
ஐந்து தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிக்க அ.தி.மு.க., முடிவு: குன்னூர் கூட்டத்தில் தீர்மானம்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், தேனி மாவட்டம் கம்பம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மனு தாக்கல் நாளை மறுதினம் (22ம் தேதி) துவங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை ஆகஸ்ட் 21ம் தேதி நடக்கிறது.
இடைத்தேர்தலில் களமிறங்க அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில், அ.தி.மு.க.,வின் அவசர செயற்குழு கூட்டம் இன்று குன்னூரில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில் குன்னூர் விவேக் ஓட்டலில் மதியம் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதற்கு முன், முக்கிய நிர்வாகிகளை ஜெயலலிதா கொடநாட்டில் காலை 10 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். செயற்குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தலை எப்படி சந்திப்பது, ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலம் உள்ளிட்ட விஷயங்களை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தலை புறக்கணித்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்ட்டது.
நடைபெறவுள்ள ஐந்து தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிப்பது என குன்னூரில் நடந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டததில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வலை பக்கம் பொய் பாருங்கண்ணா
(http://jaiindia2020.blogspot.com)
Saturday, July 18, 2009
வெடிகுண்டு முருகேசன் விமர்சனம் - ஐடியா மணி
பசுபதி கடைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் . அவர் ஒரு வலிப்பு நோயாளி வெடிகுண்டு முருகேசன் என்ற பெயர் . அலெர்ட் ஆறுமுகமாக வந்து வடிவேலு சிரிக்கவைக்கிறார், பெண் போலீஸ் வேடத்தில் ஜோதிர்மயி . சீருடையில் நோட்டை குத்தி பாடல் பாடி காவல் துறை பெண் காவலர்களை கேவலபடுத்துகிறார்.
குடித்துகொண்டே பசுபதி பள்ளியில் தன்னுடன் படித்த பெண் மனநோயாளியை கப்பற்றிவருகிறார். தண்ணி அடித்து , சாராயம் தனக்காக காய்ச்சி போலீஸ் கையில் மாட்டுகிறார், ஹோம் மேட் சரக்கு ஒடம்புக்கு நல்லது என்று விளக்கம் வேறு.
பசுபதி மெசேஜ் சொல்லி வெறுப்பேற்றுகிறார் , எப்போதாவது வந்து வடிவேலு உற்சாகமூட்டுகிறார், ஜோதிர்மயி அழுது வெறுப்பேற்றுகிறார் , பாடல்கள் தினா இனிமே இப்படி வீனா போடதீங்க .
வில்லன் அந்த மனநலம் குன்றிய பெண்ணை கெடுத்து விடுகிறான் , அதை கண்டுபிடித்த பசுபதி சண்டையில் வில்லன் தடுக்கி விழுந்து அவன் கை ஆயுதத்தாலேயே சாகிறான் . இதனால் பசுபதியை அவனின் அண்ணன் கொள்ள வருகிறான் , பிறகு அந்த பெண் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது , பிறகு வழக்கம்போல் சமாதனம் ,
ஒரு நல்ல காமெடி படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வீணடித்திருக்கிறார் கள் . பெயரை மெசேஜ் முருகேசன் அல்லது அலெர்ட் ஆறுமுகம் என வைத்திருக்கலாம் , எப்போதும் அழுது வடியும் பசுபதி ஏன்டா வந்தீங்க கேட்கிறார்
வடிவேலுவை இன்னும் சிறப்பாக அதிகமாக பயன்படுத்தி இருந்தால் நல்ல காமெடி படமாவது கிடைத்திருக்கும்.
வெடிகுண்டு முருகேசன் அல்ல வெறுப்பேற்றும் முருகேசன் .
என் நண்பன் சிவா சொன்ன கமெண்ட் இந்த படம் பார்த்தோம்னு வெளிய சொல்ல வேண்டாம் டா ,
Friday, July 17, 2009
நீலகிரி மழையில் மிதக்கிறது
அந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை மேடை ஏறிப் புரட்சி
காஞ்சிபுரம் அருகே தாமல் என்ற கிராமத்தில் 1919-ஆம் ஆண்டு இந்த இசைத் தாரகை உதித்தது. தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர். தாய் ராஜம்மாள். இருவருமே சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். தாய் ராஜம்மாள் கச்சேரி செய்யும் அளவுக்கு சங்கீதம் அறிந்தவர்தான். ஆனால் அன்றைய வழக்கப்படி குடும்பப் பெண்கள் பாட்டும், நடனமும் கற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த வகையில் பார்த்தால் அந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை மேடை ஏறிப் புரட்சி செய்தவர் பட்டம்மாள்தான். அதேபோல முதலில் நாட்டியமேடை ஏறிப் புரட்சி செய்தார் ருக்மணி அருண்டேல்.
இவர்களது அரங்கப் பிரவேசத்துக்குப் பின்னர்தான் அந்தணர் குலத்திலிருந்து பலர் மேடை ஏறத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆரம்பத்தில் பட்டம்மாள் திட்டமிட்டு ஸரளி, ஜண்டை வரிசை, கீதம், வர்ணம் என்று வழக்கமான பாணியில் இல்லாமல் சங்கீதத்தைக் கற்றார்.
கரணம் தப்பினால் மரணம் என்கிற வகையில் வரும் நிரடான பல்லவிக் கணக்குகளெல்லாம் பட்டம்மாளின் விரல் நுனியில் சேவகம் செய்தன.லய சாம்ராஜ்யத்தை கட்டி நிர்வகிக்கும் அவரது அபூர்வத் திறமை எவரையும் பிரமிக்க வைப்பது. இந்தத் திறமையால்தான் அன்றைய பெரிய பெரிய சங்கீத ஜாம்பவான்களிடம் பிரம்ம ரிஷிப் பட்டம் பெற்றார்.
ஆகஸ்ட் 15 அன்று முழுவதும் தமிழக ரேடியோவில் தேசபக்திப் பாடல்களை இடைவிடாமல் பாடும் அளவுக்குப் புகழ் பெற்றார். உள்ளூர் பாராட்டுகள் முதல் சங்கீத கலாநிதி, பத்ம விபூஷண் வரை பல்வேறு விருதுகளையும் பெற்றார்.கர்நாடக சங்கீதத்தில் லட்சியம், லட்சணம் என்று இரண்டு அம்சங்களைச் சொல்வார்கள். அப்பழுக்கின்றி இவ்விரு அம்சங்களையும் தம்மிடத்தே கொண்டு ஜொலித்த கலைஞர்கள் மிக அபூர்வம். அப்படி ஜொலித்த ஓர் அபூர்வ தாரகை பட்டம்மாள். வெறும் தாரகை மட்டுமல்ல... அவர் ஒரு மார்க்கதரிசியுமாவார்.
சுத்தத்துக்கு இன்னொரு பெயர் பட்டம்மாள்; அழுத்தம், பூரண ராகபாவம்; சாகித்ய பாவம்; அதுவும் சாகித்யத்தை தெள்ளத் தெளிவாய் உச்சரிக்கிற விஷயத்தில் பட்டம்மாவுக்கு நிகர் அவர்தான். வழவழா விவகாரமே அவரிடம் பார்க்க முடியாது.வராளி ராகத்தில் தியாகராஜரின் "ஏடி ஜென்மமிதி' கிருதியை டி.கே.பி. பாடிக் கேட்டவர்களுக்குத் தெரியும். இந்தக் கிருதியில் ""என்ன ஜென்மமடா இது ராமா'' என்று ஏங்கித் துக்கிக்கிறார் தியாகராஜர். அவரது ஆத்ம வேதனையை வராளியின் ஜீவன் பொங்கி வழியத் தன் இறைஞ்சுகின்ற குரலில் சாகித்ய பாவம் பொலியப் பொலிய டி.கே.பி. பாடுகிறபோது கல் நெஞ்சும் நெகிழ்ந்து கண்ணீர் மல்கும். இனி இந்த சங்கீத ரசவாதத்தை யார் நிகழ்த்துவார்? இனி யார் அப்படிப் பாடிக் கேட்கப் போகிறோம்?கடந்த நூற்றாண்டில் மூன்று இசைக் குயில்கள் கர்நாடக இசை மேடைகளில் கானமழை பொழிந்தனர்.
."நாம் இருவர்' திரைப்படத்தில் டி.கே. பட்டம்மாள் பாடிய "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' பாடல்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த நன்னாளில், சென்னை நகரத் தெருக்களில் நள்ளிரவு நேரத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்த அனைவரின் உற்சாகப் பாடலாக இருந்தது .
Wednesday, July 15, 2009
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை என்ன செய்யலாம்
"குடித்து விட்டு போதையில் வாகனம் ஓட்டுவது, சட்டப்படி குற்றம். குடிபோதையில் வாக னத்தை ஓட்டக் கூடாது...' இதுபோன்று அரசு மற்றும் போக்கு வரத்து போலீஸ் வட்டாரம் அறி வுறுத்துகிறது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும், தவறு செய்பவர்கள் திருந்துவதாக இல்லை. இதற்கு சாட்சியாக விளங்குவது மதுக்கடை மற்றும் பார்களுக்கு வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களே.
சரக்கை ஏற்றிக் கொள்ள வாகனத்தில் வருபவர்கள், போதையுடன் வெளியே வந்து வண்டியைத் தள்ளிக் கொண்டா போவர்! குறிப்பாக, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பார்களுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களால், சமயங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டாவதையும் கண் கூடாக பார்க்கலாம்.
குடிபோதையில் இருவர், மூவராக பைக்கில் ஏறி, பெரும் இரைச்சலுடன் ஓட்டுகின்றனர். இவர்களை பார் வாசலிலேயே கண்காணித்து, வெளியில் வந்து வாகனத்தை எடுத்தவுடன் கையும், களவுமாக பிடிக்கலாம்.
Tuesday, July 14, 2009
கல்வி , கட்டணம், கற்றவர் கடமை
Monday, July 13, 2009
குரு - சிஷ்யன்''
இதில் குருநாதர் இராம.நாராயணன் தனது சிஷ்யர் பேரரசுவை என்னைப் போலவே 'சிறுக கட்டி பெருக வாழ்' என்பார்கள் அதற்கேற்ப பட்ஜெட்டில் படம் எடுத்து தயாரிப்பாளருக்கும் செம துட்டு சம்பாதித்து கொடுக்கும் இயக்குநர் என்று வாழ்த்தினார். சிஷ்யர்களில் சேரன் தன் குருநாதர் ரவிக்குமாரின் பெருமைகளை பற்றி கூறும்போது, எல்லோரிடமும் சகஜமாக பழகும் ரவிக்குமார் சார், அஸிஸ்டண்டுகளிடம் மட்டும் சிரித்து பேச மாட்டார். அதுதான் நானெல்லாம் வெற்றி பெற காரணம் என்றார். எல்லாம் கற்று தராதது வருத்தம் என்றும் சேரன் கூற, பார்த்திபனோ குரு - சிஷ்யன் உறவுக்கு ஈடு தொப்புள் கொடி உறவு கூட கிடையாது என்றார். அவரது குருநாதர் கே.பாக்யராஜோ, பார்த்திபன், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் ஆகிய மூவரும் 'முந்தானை முடிச்சு' படப்பிடிப்பில் ஒவ்வொருவராக சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றதையும், அதற்காக அந்த படத்தில் வைத்த குரு துரோகி டயலாக்கையும் சொல்லி அதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்றார்.
Friday, July 10, 2009
நைட்ரஜன் வாயுடூவீலர் டயர்கள் இனி அடிக்கடி வெடிக்காது
இந்தியாவில் பொதுமக் கள் பயன்படுத்தும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்த, மத் திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதன்படி இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம், தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் நைட்ரஜன் வாயுவை நிரப்பிக் கொள்ளும் வசதியை, பெட்ரோல் பங்க்குகளில் ஏற்படுத்த முடிவு செய்தது.கோவை, அவினாசி ரோட்டிலுள்ள ரவிச்சந் திரா, ஜெயம் அண்ட் கோ, ராம் அண்ட் கோ, சிங்காநல்லூரிலுள்ள சாந்தி கியர்ஸ், வடகோவை, உக் கடம், மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு, திருச்சி ரோட்டிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட் ரோல் பங்க்களில் நைட்ரஜன் வாயு இலவசமாக, வாகனங்களில் நிரப்பி கொடுக்கப்படுகிறது.
நைட்ரஜன் வாயுவை வாகன சக்கரங்களில் நிரப் பும் போது, அதிக மைலேஜ் கிடைக்கிறது. டயர், டியூப் ஆயுள் நீட்டிப்பதுடன், டியூப் வெடிப்பு தடுக்கப்படுகிறது.நைட்ரஜன் வாயுவில் ஈரத்தன்மை குறைவாக இருப்பதால், சக்கரத்தினுள் துருப் பிடிப்பது தடுக்கப்படுகிறது. வாகனம் ஓட்டும் போது பிடிப்புத் தன்மை (ரோடு கிரிப்) கிடைக்கிறது. பயணிப்பதற்கு சொகுசாக இருக்கும். அடிக்கடி காற்றின் அளவை சரி பார்க்க வேண் டிய அவசியம் இல்லை.'இலவசமாக அறிமுகப் படுத்தப்பட்ட இந்த வசதியை, வாகன ஓட்டிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'
சர்க்கஸ் கூடாரத்தில் சக்ஸஸ் காதல்
நேபாளத்தைச் சேர்ந்தவர் சூரஜ்(26); அற் புதமான "பார்' விளையாட்டு வீரர். தொங்குகிற கம்பியிலிருந்து கைகளை விட்டு, அங்கேயும் இங்கேயுமாக இவர் பறப்பதைப் பார்த் தால், கூடாரமே அதிரும்.இதே சர்க்கஸ்சில் யானையின் மீதும், சைக்கிளின் மீதும் விதவிதமாய் வித்தை செய்து பொடுசுகள் முதல் பெருசுகள் வரை ஈர்க்கிற நேபாள அழகி சுனிதா(22). இருவரும் ஒரே மாநிலம் என்பதோடு, இதே கூடாரத்தில் சிறு வயதிலிருந்தே சிநேகிதம்.
இருவருக்கும் காதல் பற்றியதும், சர்க்கஸ் உரிமையாளரிடம் விஷயத்தைச் சொல்ல, பெற்றோரை அழைத் துப் பேச, திருமணம் கைகூடியது.அப்போதுதான் தெரியவந்தது, இதே கூடாரத்தில் இன்னொரு காதல் ஜோடி இருக்கிறதென்று. கேரளாவைச் சேர்ந்த 24 வயது சைஜூவும், நேபாளத் தைச் சேர்ந்த 21 வயது மீனாவும், அந்த மற்றொரு ஜோடி. சைஜூவும் அட்டகாசமான "பார்' விளையாட்டு வீரர்; ஜிம்னாஸ்டிக்கில் அசத்துபவர்.
அந்தரத்திலே (ஸ்கை வாக்) நடந்து எல்லாரையும் விழி விரிய வைப்பவர் மீனா. இவர் களின் காதலுக்கும் இரு வீட் டாரின் பெற்றோரிடமும் சம்மதம் வாங்கினார் ஜம்போ சர்க்கஸ் தலைவர் அஜய். கோவையிலேயே இந்த திருமணத்தை நடத்த முடிவு செய் யப்பட்டது.நான்கு பேருடைய பெற் றோரும் வரவழைக்கப்பட்டனர்.
சர்க்கஸ் கூடாரமே திருமண வீடாக கோலாகலம் பூண் டது. கோவை கிரே டவுனில் உள்ள மாங்காடு தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் நேற்று காலையில் திருமணம் நடந்தது. தமிழ் முறைப்படி பட்டு வேட்டி, சட்டைகளில் மாப்பிள்ளைகள் கலக்கினர்.மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ், பவிழம் ஜூவல்லர்ஸ் லிஜோ சுங்கத், சர்க்கஸ் ஊழியர்கள், சிறுவர், சிறுமியர் உட்பட எல் லாரும் மணமக்களை வாழ்த்தினர்.
கோவிலில் இருந்து சர்க் கஸ் கூடாரத்துக்கு வந்த அவர் களை சர்க்கஸ் யானை ஆசி வழங்கி வரவேற்றது.திருமணத்துக்கு வந்தவர்களுக்கு லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் காஸ்மோஸ் சார்பில் இனிப்புகள் மற்றும் குளிர் பானம் வழங்கப்பட்டது.
அரசியல் பிரவேசமா?; -அஜீத்
தனது பிறந்த நாளின்போது மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அறிவுறுத்தி அப்பணிகளை தொடர்ந்து செய்ய வைத்து வருகிறார்.ரத்த தானம், ஏழைகளுக்கு உதவி வழங்குதல் போன்ற காரியங்களிலும் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னொருபுறம் ரசிகர் மன்றத்துக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பும் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.
Thursday, July 9, 2009
வரி , வட்டி , திரை, கிஸ்தி - எத்தன ? முடியல
இதற்கு மேல் மூளையை கசக்கிப் பிழிந்து கண்டு பிடித்து, இப்போது புதிதாக வந்திருக்கிறது, "சாலை பாதுகாப்பு வரி!' சாலை விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போருக்கு உதவும் வகையில், இந்த வரி கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. காயமடைவோர், உயி ரிழப்புகளுக்காகத் தான் ஏற்கனவே, அனைத்து வாகனங்களுக்கும் கட்டாய இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சட்டை, டவுசரை பிடுங்குகிற அளவுக்கு பிரிமியம் வசூல் பண்ணி, அதன் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், புதிய வாகனங்கள் வாங்கும் போது, வாகன வரி, சாலை வரி வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், விபத்து, மரணத்திற்கு தாராள இழப் பீடு வழங்கலாமே! இந்த சாலை பாதுகாப்பு வரி தேவையற்றது.
டாஸ்மாக் கடைகள் மூலம், பணம் கொட்டுகிறது. இதுதவிர, சாதாரண ஏழை கூட, வீடு ரிப்பேருக்கு, ஒரு மூட்டை சிமென்ட் 275 ரூபாய்க்கு வாங்கினால், இதில் அரசுக்கு, விற்பனை வரி, செஸ் வரி, சுங்க வரி, இதர வரிகள் எல்லாம், 80 ரூபாய்க்கு மேல் போய் சேருகிறது.
ஒரு மூட்டை சிமென்ட்டிலேயே இப்படி என்றால், குண்டூசி முதல் கோடி ரூபாய் மிஷின் வரை எத்தனை கோடி வசூலாகும். இந்தப் பணத்தில், அரசு ஊழியர்களை, "மனம் குளிர' வைத்துக் கொள்ள, சம்பளத்தை அள்ளிக் கொடுத் தும், இலவச "டிவி'யிலிருந்து என்னென்ன வோ கொடுத்து, அவ் வளவு செலவையும் சரிக் கட்ட இப்படியெல்லாம் வித, விதமாக வரியை கண்டுபிடித்து போடுகின்றனர்.
பெரும்பாலான இலவசங்கள், வாங்குகிறவர்கள் பாக் கெட்டிலிருந்தே எடுத்து கொடுக்கப் படுகின்றன. மேலும் கொஞ்சம் பள, பள வென ஒரு புதிய ரோடு அல் லது ரிங்ரோடு போட்டால், உடனே அங்கு டோல் கேட் வரி வசூலிக்கப்படுகிறது. இப்படியெல்லாம் வசூலித்தது பத்தாது என, சாலை பாதுகாப்பு வரி என்பது நியாயமற்றது. அரசு இதை, கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் சுமை யை, மக்கள் மீது சுமத்தாமல் நீக்க வேண்டும்.
விரக்தியில் விஷால்
Wednesday, July 8, 2009
நடிகர் விஜய் ஆரம்பிக்க போகும் டிவி விரைவில்
அப்பா சேனல் பெயர் என்ன விஜய் டிவி ன்னு வைக்க முடியாதே .
Tuesday, July 7, 2009
சினிமா போல் அமெரிக்காவில் போதை கடத்தி இந்திய கிராமத்தில் வளர்ச்சிப் பணி
சண்டிகார்: அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்தியர்கள் இருவர், கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை தங்களின் சொந்த கிராம முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதாக அந்நாட்டு கோர்ட்டில் தெரிவித்தனர்.
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள குரேக், சீம்னா ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் ஹர்ஜித் சிங் மன் மற்றும் சுக்ராஜ் சிங் தாலிவால். சிறுவயது முதலே நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும், 1990ம் ஆண்டு அமெரிக்கா சென்றனர். அங்கு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த குர்மித் சிங் பிஸ்லா என்பவருடன் இவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, ஹர்ஜித் சிங் மன், சுக்ராஜ் சிங் தாலிவால் மற்றும் குர்மித் சிங் பிஸ்லா ஆகிய மூவரும் சேர்ந்து அமெரிக்கா மற்றும் கனடா இடையே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டனர். சமீபத்தில், இவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
அங்கு இவர்கள் மூவரும், கடந்த ஐந்தாண்டுகளில், அமெரிக்காவின் பேக்கர்ஸ்பீல்டு பகுதியில் இருந்து கனடாவிற்கு 36 ஆயிரம் கிலோ கிராம் கோகைய்ன் என்னும் போதைப் பொருள் கடத்தியதாக ஒப்புக் கொண்டனர். மேலும், குர்மித் பிஸ்லா கூறியதாவது: பஞ்சாபில் உள்ள சீம்னா மற்றும் குரேக் ஆகிய கிராமங்களை சேர்ந்த மன் மற்றும் தாலிவால் இருவரும், போதைப் பொருள் கடத்தல் மூலம் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை, தங்களின் சொந்த கிராம முன்னேற்றத்திற்காக பயன்படுத்தினர். ஹர்ஜித் சிங் மன், தனது கிராம குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு அரங்கமும், மக்களுக்காக புதிய சமுதாயக் கூடம் ஒன்றையும் கட்டிக் கொடுத்துள் ளார் என்றார்.
Monday, July 6, 2009
அஜித்தை ரசிகர்கள் வெறுக்க காரணம்
ஹிந்தியில் ஷாருக்குடன் அசோகா என விறு விறு வென வளர்ந்தார் .
மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்க தொடங்கினர் .
அவர் நடித்த ரெட் அனைவரின் வெறுப்புக்கும் காரணமாக அமைந்தது இந்த படத்தை பற்றி சொல்ல தேவை இல்லை எல்லோருக்கும் தெரியும் . அஜித்துக்கு பெரிய சறுக்கலை கொடுத்தது ,தொடர்ந்து வந்த ராஜா சுமார்.
இன்று கூட பலரும் வாலி வரை அஜித்தான் பிடிக்கும் ரெட் வந்த பிறகு பிடிக்காது என்று சொல்வார்கள் .இத்தனை அடுத்து வந்த வில்லன் கொஞ்சம் பழைய பெயரை கொடுத்தது.
பிறகு தான் அவர் நடித்த ஆஞ்சனேயா மீண்டும் ரசிகர்களை சோதித்து பார்த்தது அடுத்து வந்த ஜனா ஒட்டு மொத்த ரசிகர்களின் வெறுப்பை பெற்றது ரெட்-யை விட பலத்த சறுக்கல் அஜித்துக்கு . இன்று வரை யாரும் பொறுமையாக முழுதும் பார்க்கமுடியாத படம் . இடையிடையே சுமாரான படங்களை கொடுத்தார் .
அடுத்து வந்த அட்டகாசம் மீதம் இருந்த ரசிகர்களுக்கு தீனி போட்டது , மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அடுத்து வந்த ஜீ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை .
அதற்கப்புறம் வந்த திருப்பதி திருப்தி கொடுத்தது ,
அடுத்து வந்த வரலாறு அஜித் முன்னேற வழிவகுத்தது , தீபாவளிக்கு வந்த ஆழ்வார் படம் போக்கிரி . தமிரபாரணி ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கமுடிய வில்லை .
அடுத்து வந்த பில்லா மெகா ஹிட் இழந்த ரசிகர்களை மீது அஜித்துக்கு கொடுத்தது , தமிழில் இதுவரை வந்த ஸ்டைல்இஸ் படம் இது மட்டும்தான் . ஏகன் சுமாராக போனது .
அஜித் மட்டும் ரெட் , ஜனா ஆகிய படங்களில் நடிக்காமல் இருந்திருந்தால் ரஜினிக்கு அருகே சென்றிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
Sunday, July 5, 2009
விஜய் அரசியலுக்கு வர என்ன செய்ய வேண்டும்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி, ரசிகர் மன்றத்தினருடன் கலந்து ஆலோசித்துள்ளார். அவர்களும், "நீங்கள் அரசியலுக்கு வாருங்கள்; நாங்கள் எல் லாரும் உங்கள் பின்னால் இருக்கிறோம்' என்று சொன்னதை நம்பி, அரசியலில் குதிக்கப் போகிறார்.
"நான் நிறைய பத்திரிகைகள் படிக்கிறேன். அதனால் அரசியல் நடப்பு எனக்கு தெரியும். ஒரு சாமான்யனுக்கு எந்தளவு அரசியல் தெரியுமோ, அந்தளவுக்கு எனக்குத் தெரியும்' என்று கூறியுள்ளார். இப்படி இவர் கூறியது, இன்னும், தான் அரசியலில் போதிய அனுபவம் பெறவில்லை என்பதையே காட்டுகிறது.
ஒரு கட்சி ஆரம்பித்து, அதன் தலைவராக ஆக நினைக்கும் அவருக்கு, 49 படத்தில் நடித்த அனுபவம் மட்டும் போதாது. ஜனநாயக நாட்டில் ஒருவர், எந்த கட்சியையும் ஆரம்பிக்கலாம், ஆதரிக்கலாம், நடத்தலாம்; ஆனால், மக்கள் மனதில் இடம் பெறுபவரே, ஆட்சியைப் பிடிப்பவர். அந்த வகையில், எம்.ஜி.ஆர்., - என்.டி.ஆர்., போன்றவர்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால், தற்போதைய ரசிகர்களை நம்பி, ஆந்திராவில் கட்சியை ஆரம்பித்து, தவித்து வரும் பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி, அங்கே சூப்பர் ஸ்டார் தான்; ஆனால், அவரை முழுமையாக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே!
"ஒருவன் எதைப் பெற முழுத் தகுதியுடையவனாக இருக்கிறானோ, அவன் அதை ஒரு நாள் பெற, இப்பிரபஞ்சத்தில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது' என்ற விவேகானந்தரின் கூற்றுப்படி, விஜய் அரசியலுக்கு வரட்டும். ஆனால், அனுபவம் பெற்று, மக்களுக்கு சேவை செய்தால், அவர்களாகவே உங்களை அரசியலில் ஆதரிப்பர். அதை விட்டு, ரசிகர் கூட்டத்தை நம்பி இறங்கினால், மண் குதிரையை நம்பி, ஆற்றில் இறங்கிய கதையாகி விடும்.
வீரப்பன் வாங்கிய சத்தியம்!
கோவை கே.ஜி., மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் எழுதிய, "இதயம் ஒரு கோவில்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய, "நக்கீரன்' இதழ் ஆசிரியர் கோபால், தனது வழக்கமான பாணியில் வீரப்பன் கதையை எடுத்துவிட்டார்.
அவர் பேசுகையில், "கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க காட்டுக்கு சென்றிருந்த போது, நான், வீரப்பன், ராஜ்குமார் மூவரும் வரிசையாக படுத்துக் கொண்டிருந்தோம். அப்போது வீரப்பன் என்னிடம், "உன் மகளை என்ன படிக்க வைக்கப் போகிறாய்?' எனக் கேட்டான்.
நான், "ஐ.ஏ.எஸ்., படிக்க வைக்கப் போகிறேன்' என்றேன். அதற்கு வீரப்பன், "ஐ.ஏ.எஸ்., படிக்க வைக்காதே; அவ்வளவு படிச்சுட்டு, ஒண்ணுமே படிக்காத அரசியல்வாதிகள் பின்னால கை கட்டி நிற்க வேண்டியிருக்கும்.
அது வேண்டாம்; உன் மகளை டாக்டருக்கு படிக்க வை' என்றான். அதோடு விடாமல், என்னிடம், "மகளை டாக்டருக்கு படிக்க வைக்கிறேன் என சத்தியம் வேற வாங்கிக்கொண்டான்' எனச் சொல்லி முடித்தார்.எப்படி, "ரியாக்ட்' பண்ணுவது எனத் தெரியாமல் விழித்தார், நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ்.
Saturday, July 4, 2009
தன்னம்பிக்கையை தாண்டிய உறுதி
இடையிடையே பரமஹம்சர் சிரிப்பார் , பரவசமடைவார் சுற்றி இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . பரமஹம்சர் இறைவன் இல்லை என்பதை ஒப்பு கொண்டுவிட்டார் என அனைவரும் நினைத்தனர் , கேசவந்திரசென் கூட தான் வேட்ட்ரிபெட்ட்று விட்டதாக நினைத்தார் .
பேசி ஓய்ந்த கேசவந்திரசென் கலைப்படைந்தபோது பரமஹம்சர் சொன்னார் . உங்கள் வாதங்கள் அருமை , அற்ப்புதம் ஆனால் நான் என்ன செய்வேன் கடவுள் இருப்பது எனக்கு நன்றாக தெரியுமே என்றார் . இதுதான் தன்னம்பிக்கையை தாண்டிய உறுதி இதுதானே ..
தெலுங்கிலும் கலக்கும் அயன் சூர்யா
தமிழில் இந்தவருட மெகா கமர்சியல் ஹிட் சூர்யா நடித்த அயன்.தமிழில் கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஏ .வி . எம் அயனை தெலுங்கில் "வீடோக்காடே "(Veedokkade ) என்ற பெயரில் டப் செய்து (200) திரையரங்குகளில் வெளியிட்டது
ரசிகர்கள் தமிழ் படங்களை விடஅதிகமாக கமர்சியல் படத்தை விரும்புவார்கள் .
அயன் அங்கு சக்கை போடுபோட்டுவருகிறது .
தமிழைப்போலதெலுங்கிலும் அயன் வசூல் சாதனையை முறியடிக்கும் என்பதுதெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
சன் குழுமதெலுங்கு சேனல்கள் சன் டிவி போல விளம்பரங்கள் தந்துவருகின்றன. தெலுங்கு முன்னணி நடிகர்களுக்கு இது பெரியஅதிர்ச்சி யாக உள்ளது .
கலக்குங்க சூர்யா ..Friday, July 3, 2009
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க
உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் அன்பிற்க்குஉரியவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க
பிறந்தநாள் கொண்டாடுபவரின் பெயர், ஊர் , விருப்பமிருந்தால் வயதையும் , அவரின் புகைப்படத்தையும் , தெரிவிக்கும் உங்கள் பெயரையும், வாழ்த்து செய்தியையும் இணைத்து (ganesanjaikumarsrm@gmail.com) அல்லது (vinjaikumar@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
உங்கள் ஐடியா மணி வலைதளத்தில் வாழ்த்து செய்தி சிறப்பாக தெரிவிக்கிறேன் .
இன்றும் நாளையும் புகைப்படம் இல்லாதவர்கள் கமெண்ட் ல் சொல்லுங்கள்.
உங்கள் ஐடியா மணி வலைதளத்தில் வாழ்த்து செய்தி சிறப்பாக தெரிவிக்கிறேன் .
உங்கள் அன்பானவரின் பிறந்தநாளை இந்த ஐடியா மணி உடன் கொண்டாடுங்கள் .
இடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே இடுக்கண்
களைவதாம் நட்பு .
உங்கள் ஐடியா மணி
பிரித்தனர் காதலியை ., விழுங்கினார் தாலியை
தஞ்சாவூர் பக்கத்துல பாபநாசம் என்கிற ஊர் ல வேல்முருகன்னு கேட்டரிங் அதனா சமையல் கலை முடிசிட்டு கொஞ்சநாள் அப்புறம்
அவரோட மாமா செல் போன் கடைக்கி வேலைக்கி போய்ட்டாரு அப்ப அங்க வந்த பக்கத்து வீட்டு பொண்ணு உஷா , இவரு லவ் பண்ண ஆரம்பிச்சாங்க.
இரண்டு வருடம் இப்புடியே போயிடுச்சி அப்பறம் வழக்கம் போல அவங்க வீட்டுக்கு தெரிஞ்சி சொந்தக்கார பையனுக்கு நிச்சயம் பண்ணிடாங்க . இருவரும் மேஜர் ஒடனே ரெண்டு பேரு கோயில்ல வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டாங்க .
ஒரு வாடகை வீட்டுல அந்த செல் போன் கடைல வேலை பார்க்க இப்படியே பதினைந்து நாள் போய்டுச்சி பொண்ண கடத்திட்டு போயட்டருன்னு காவல் நிலையத்துல கேஸ் குடுத்துட்டாங்க .
விசாரணைக்கு வேல்முருகன்-உஷா அங்க போனாங்க அங்கிருக்கும் ஆய்வாளர் இவங்களை மிரட்டி அதனால அந்த பொண்ணு தாலிய கழட்டி வேல் முருகன் கைல குடுத்துட்டு இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லைன்னு எழுதி வாங்கிகிட்டு அவங்க அப்பகூட உஷாவை அனுப்பிட்டாங்க .
ஆனா வேல்முருகன் பொறுத்துக்க முடியாம தாலிய வாயில் போட்டு விழுங்கி விட்டார் . வழியாலும் இப்போது அவதிப்படுகிறார் .
உஷா கழுத்தில் ஏறும் வரை இங்கு தான் இருக்கும் . மருத்துவர்கள் தாலி பெருங்குடலில் சிக்கி ஆபத்தான நிலையை உருவாக்கும் என எச்சரித்தும் அவர் மறுத்துவிட்டார் .
அந்த ஆய்வாளர் இப்போது மாறுதலில் சென்னை சென்றுவிட்டார் . மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டுள்ளார் . பார்ர்ப்போம் என்ன நடக்கும் என்று .. .
எத்தனை வீடுகளில் உண்மை காதலை ஏற்றுக்கொள்கின்றனர் . காதல்ன்னு படம் வந்தப்ப அந்த படத்துல இறுதி காட்சில பாத்துட்டு ஏன் இப்படி பண்றாங்க அவங்கள சேர்த்து வைகலையே ன்னு எத்தனை பேர் அழுதவங்க தெரியுமா,.. சினிமாவில் மட்டும் தான் காதலுக்கு மரியாதை. மக்களும் கைதட்டுகின்றனர் , நடைமுறையில் ஜாதி ,மதம் , பணம் தான் முடிவுசெய்கிறது.. முக்கிய காரணம் இந்த சமூகம்தான் நா ...
Thursday, July 2, 2009
அரவிந்தசாமிக்கும் , ஆற்காடு வீரசாமிக்கும் என்ன வித்தியாசம்
இன்னிக்கு நம்ம ஊர்ல காந்திபுரம் , ஹோப் காலேஜ் எல்லா சுத்தி என்னஎழுதலானு பார்த்தா எதுவுமே தோணல வீட்டுக்கு போனா டிவில மின்சார கனவு சினிமா ஓடிட்டு இருக்கு அதுல அரவிந்தசாமி கஜோல் அக்கா கூட தங்கத்தாமரை மகளே வா அருகேன்னு கூப்டாரு அப்ப மின்சாரம் கட் அப்பவந்துதா இந்த
அரவிந்தசாமிக்கும் , ஆற்காடு வீரசாமிக்கும் என்ன வித்தியாசம் ஜோக் :
அரவிந்தசாமி வந்தது மின்சார கனவு , ஆற்காடு வீராசாமி வந்ததால் மின்சாரமே கனவு. இன்னு சொல்லிடே போகலாம்
தமிழ் நாட்டு மக்களுக்கு இது ஜோக் இல்ல . அவர்களுக்கு இது உண்மையானநிகழ்வு. அவர்களது வேதனை
வரேநுங்நா.
Wednesday, July 1, 2009
எங்கே பிரபாகரன்? அவருக்கு பிடித்த திரைப்படம் எது?
பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களிலொன்று "" The Battle Of Algiers. 1954 க்கும் 1962க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிரெஞ்சுஏகாதிபத்தியத்திற்கெதிராக அல்ஜீரியர்கள் நடாத்திய போராட்டங்களின்உண்மைச் சம்பவங்களின் சாயலைக்கொண்டு உருவாக்கபட்ட படம் அது. வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த திரைப்படங்களிலொன்று. கில்லோபொன்ராகோவோ எனும் இத்தாலிய நெறியாளருடையது. அத்திரைப் படத்தில்அலி லா பொன்ரே என்கிற கொரில்லாப் போராளித் தலைவன் இறுதியில்கொல்லப்படுகிறான். அதற்குப் பிறகு வெடித்தெழும் வெகுஜனப் போராட்டங்கள்ஏறத்தாழ மூன்றாண்டுகளின் பின்னர் அல்ஜீரியாவுக்கு விடுதலையை வாங்கிக்கொடுக்கின்றன. விடுதலைப்புலிகளது பெருமளவு தலைமைகள்கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிற இச்சந்தர்ப்பத்தில் திரும்பிப்பார்க்கவேண்டிய புள்ளிகளிளொன்று இது.
கரகாட்டக்காரன் ரீமேக் - விஜயகாந்த் , நயன்தாரா நடிப்பில் கற்பனை கலாட்டா
டைரக்டர் யாருன்னு தெரியுமா நம்ம பேரரசு கவுண்டமனியாக விஜயகாந்தே பண்றாரு ஏன் தெர்யுமா செந்திலாக நம்ம வடிவேல் நடிக்கிறாரு . இப்ப காரணம் தெரிஞ்சிதா . அடுத்து விஜயகாந்த் அம்மா வேடத்துக்கு அந்த படத்துல காந்திமதி கலக்கிருப்பாங்க அதுக்கு நம்ம ஓட்ட வாய் சுகாசினி தா சரியாக இருக்கு . ரெண்டு பெரு பேசுனா ஒரே மாதிரி இருக்கும் , அவங்க தம்பியா நம்ம சக்தி சிதம்பரத்த போட்டுடலா .
ஒரே கமெடி தா போங்கனா .
இப்ப படம் ஸ்டார்ட் விஜயகாந்த நயன்தாரா கரகாட்ட போட்டிக்கு கூப்புடுறாங்க
விஜயகாந்த் : இந்தா பாரு புள்ள நா உன்கூட லா ஆடமாட்டே மக்கள் கூட மட்டும் தா ஆடுவே . அதுவு போலீஸ் டிரஸ் குடுதீங்கன்ன இன்னு நல்லா ஆடுவே.
.
அடுத்து விஜய் டிவி ல உங்களில் யார் அடுத்த பிரபு தேவா ஓடிட்டு இருக்கு
நம்ம வடிவேல் ( கவுண்டமனி) விஜயகாந்த்துகிட்ட காதுல சொல்ல அவரு அப்புடியே ஜம்ப்பண்ணி உதைக்கிறாரு
விஜயகாந்த் : அது ஏன்டா என்ன பார்த்து கேட்ட .. மறுபடி உதைக்க இன்னொரு விஜயகாந்த் என்னடா அவன அடிசிகிட்டே இருக்க அப்படி என்னதா கேட்டா . ( கவுண்டமனி)விஜயகாந்த் மறுபடி உதைக்க அங்க வராங்க சுகாசினி பட்ஜெட் கம்மி அதனால நோ கோவை சரளா ..
சுகாசினி: என்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட .
( கவுண்டமனி)விஜயகாந்த்: அவன் என்ன பார்த்து என்ன கேள்வி கேட்டா தெர்யுமா முதல்ல சிம்பு, இப்ப பிரபு தேவா , அப்ப உங்களில் யார் அடுத்த பிரபு தேவா னு கேக்குறா இந்தா பய . டேய் இந்த இந்திய நாட்டுல இருக்குற மக்கள்ள (எல்லோரு எஸ்கேப்)
அடுத்து நம்ம டைரக்டர் எங்க னு நீங்க கேக்குறது தெரியிது அவரு இல்லாமலா அவரு அப்பறம் நம்ம சுகாசினி சக்தி சிதம்பரம் சண்டைய அடுத்த பார்ட் ல பார்ர்ப்போம்
கமெண்ட் பண்ணுக . எனக்கு இப்ப சிறுவாணி ஆத்துல குளிக்கபோக டைம் னா
அப்புடியே ஹோப் காலேஜ் , காந்திபுரம்லா போய் அடுத்த பதிவு ஆரம்பிக்கணும் ..
வரேண்னா ........