Monday, July 13, 2009

குரு - சிஷ்யன்''

சத்யராஜ்- சுந்தர்.சி இணைந்து நடிக்கும் ஷக்தி சதம்பரம் இயக்கும் படத்திற்கு 'குரு சிஷ்யன்' என பெயர் சூட்டி பூஜை போட்டுள்ளனர் இதில் விசேஷம் ஏ.வி.எம்மில் நடந்த படத்தொடக்க விழாவில் திரையுலகில் குரு - சிஷ்யர்களான இராம.நாராயணன் - பேரரசு, கே.பாக்யராஜ் - பார்த்திபன், மணிவண்ணன் - சீமான், கே.எஸ்.ரவிக்குமார் - சேரன், எடிட்டர் மோகன் - ஜெயம் ராஜா உள்ளிட்டோரை பங்கேற்க வைத்து அவர்களது குரு - சிஷ்ய அனுபவங்களை பேச வைத்து வாழ்த்து பெற்றதுதான் ஹைலைட்!

இதில் குருநாதர் இராம.நாராயணன் தனது சிஷ்யர் பேரரசுவை என்னைப் போலவே 'சிறுக கட்டி பெருக வாழ்' என்பார்கள் அதற்கேற்ப பட்ஜெட்டில் படம் எடுத்து தயாரிப்பாளருக்கும் செம துட்டு சம்பாதித்து கொடுக்கும் இயக்குநர் என்று வாழ்த்தினார். சிஷ்யர்களில் சேரன் தன் குருநாதர் ரவிக்குமாரின் பெருமைகளை பற்றி கூறும்போது, எல்லோரிடமும் சகஜமாக பழகும் ரவிக்குமார் சார், அஸிஸ்டண்டுகளிடம் மட்டும் சிரித்து பேச மாட்டார். அதுதான் நானெல்லாம் வெற்றி பெற காரணம் என்றார். எல்லாம் கற்று தராதது வருத்தம் என்றும் சேரன் கூற, பார்த்திபனோ குரு - சிஷ்யன் உறவுக்கு ஈடு தொப்புள் கொடி உறவு கூட கிடையாது என்றார். அவரது குருநாதர் கே.பாக்யராஜோ, பார்த்திபன், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் ஆகிய மூவரும் 'முந்தானை முடிச்சு' படப்பிடிப்பில் ஒவ்வொருவராக சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றதையும், அதற்காக அந்த படத்தில் வைத்த குரு துரோகி டயலாக்கையும் சொல்லி அதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment