சர்க்கஸ் கூடாரத்தில் நிகழ்ந்த சக்ஸஸ் காதல் கதை இது. கோவை நகரம் சமீபத்தில் இப்படியொரு திருமணத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. கோவை வ.உ.சி., மைதானத்தில் நடந்து வரும் ஜம்போ சர்க்கஸ் கூடாரம்தான், இந்த காதல் ஜோடிகளின் வசிப்பிடம், புகலிடம், புகுந்த இடம் எல்லாமே.
நேபாளத்தைச் சேர்ந்தவர் சூரஜ்(26); அற் புதமான "பார்' விளையாட்டு வீரர். தொங்குகிற கம்பியிலிருந்து கைகளை விட்டு, அங்கேயும் இங்கேயுமாக இவர் பறப்பதைப் பார்த் தால், கூடாரமே அதிரும்.இதே சர்க்கஸ்சில் யானையின் மீதும், சைக்கிளின் மீதும் விதவிதமாய் வித்தை செய்து பொடுசுகள் முதல் பெருசுகள் வரை ஈர்க்கிற நேபாள அழகி சுனிதா(22). இருவரும் ஒரே மாநிலம் என்பதோடு, இதே கூடாரத்தில் சிறு வயதிலிருந்தே சிநேகிதம்.
இருவருக்கும் காதல் பற்றியதும், சர்க்கஸ் உரிமையாளரிடம் விஷயத்தைச் சொல்ல, பெற்றோரை அழைத் துப் பேச, திருமணம் கைகூடியது.அப்போதுதான் தெரியவந்தது, இதே கூடாரத்தில் இன்னொரு காதல் ஜோடி இருக்கிறதென்று. கேரளாவைச் சேர்ந்த 24 வயது சைஜூவும், நேபாளத் தைச் சேர்ந்த 21 வயது மீனாவும், அந்த மற்றொரு ஜோடி. சைஜூவும் அட்டகாசமான "பார்' விளையாட்டு வீரர்; ஜிம்னாஸ்டிக்கில் அசத்துபவர்.
அந்தரத்திலே (ஸ்கை வாக்) நடந்து எல்லாரையும் விழி விரிய வைப்பவர் மீனா. இவர் களின் காதலுக்கும் இரு வீட் டாரின் பெற்றோரிடமும் சம்மதம் வாங்கினார் ஜம்போ சர்க்கஸ் தலைவர் அஜய். கோவையிலேயே இந்த திருமணத்தை நடத்த முடிவு செய் யப்பட்டது.நான்கு பேருடைய பெற் றோரும் வரவழைக்கப்பட்டனர்.
சர்க்கஸ் கூடாரமே திருமண வீடாக கோலாகலம் பூண் டது. கோவை கிரே டவுனில் உள்ள மாங்காடு தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் நேற்று காலையில் திருமணம் நடந்தது. தமிழ் முறைப்படி பட்டு வேட்டி, சட்டைகளில் மாப்பிள்ளைகள் கலக்கினர்.மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ், பவிழம் ஜூவல்லர்ஸ் லிஜோ சுங்கத், சர்க்கஸ் ஊழியர்கள், சிறுவர், சிறுமியர் உட்பட எல் லாரும் மணமக்களை வாழ்த்தினர்.
கோவிலில் இருந்து சர்க் கஸ் கூடாரத்துக்கு வந்த அவர் களை சர்க்கஸ் யானை ஆசி வழங்கி வரவேற்றது.திருமணத்துக்கு வந்தவர்களுக்கு லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் காஸ்மோஸ் சார்பில் இனிப்புகள் மற்றும் குளிர் பானம் வழங்கப்பட்டது.
Friday, July 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment